கோட்டபாய குறித்து ரணில் முக்கிய தகவல்!!

 


கோட்டாபய நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை,” என்று விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அதோடு “அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை.” என்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியை அடுத்து வெடித்த மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டிவிட்டு ஜூலை 13 ஆம் திகதி தப்பியோடியதுடன் தனது பதவியில் இருந்தும் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.