விடுமுறை இரத்து - அறிவிப்பு வெளியானது!!

 


அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். 

எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது அலுவலக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் பொதுப்போக்குவரத்து தற்போது இயல்பிற்குத் திரும்பியுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. 

போக்குவரத்து சேவையிலிருந்து விலகியிருந்த 800 பேருந்துகள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் வெற்றிகரமாக QR முறையில் எரிபொருள் வழங்கப்படுகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.