முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மீண்டும் காணி சுவீகரிப்பு முயற்சி!!

 


இன்றும்  முல்லைத்தீவு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமிற்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் திரண்டு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


617 ஏக்கர் நிலம் உள்ளடங்குகின்ற வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமில் பெரும்பாலான பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களாகும்.


இதில் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக நில அளவை செய்து காணியை நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவந்தன.


இதனை அறிந்து அங்கு சென்ற போராட்டக்காரர்கள் வீதியை மறித்து, தங்கள் நிலங்களை அளவு செய்வதற்காக முகாமிற்குள் அதிகாரிகளை நுழைய விடாமல் தடுத்து போராடி வருகின்றனர்.


  எனினும் பொதுமக்களின் எதிர்ப்பால் அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்றும் அளவீடு செய்து காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.