இரு மீனவர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியாவில் தஞ்சம்!


யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.


இந்தியாவின் நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு காவல் சரகம் , சிறுதலைக்காடு மீனவ கிராமத்தில் இருந்து தொலைபேசி  மூலம் இலங்கை நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இரண்டு நபர்கள் வந்ததாக தகவல் கூறியதின் பேரில்  விசாரணை செய்ததில் அமலதாஸ் ஆண்டனி பலாலி, யாழ்பாணம், என்பவருக்கு சொந்தமான படகில் 31ம் திகதி மதியம்  பலாலி மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டுள்ளனர்.


இவ்வாறு புறப்பட்ட  வி.ஜெனார்தனன், வயது 28 , பலாலி, யாழ்பாணம், மற்றும் கா. ஜெசிகரன் பலாலி, யாழ்பாணம், ஆகிய இருவரும் தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.