நீரில் மூழ்கிய ஒருவர் சடலமாக மீட்பு!!

 


கடந்த 1ம் திகதி  நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.   நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி - கெட்டபுலா அக்கரவத்தை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இவர்கள்  அடித்து செல்லப்பட்டிருந்தனர். 


இவர்களைத் தேடும் பணிகள் சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.


மாகாவலி ஆற்றின் கம்பளை - மொரகலை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.


3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.


 மேலும் இரண்டு பேரை கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.