சட்டவிரோத மதுபான விற்பனை- இருவர் கைது!!

 


கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமன்றி அரச சீல் மதுபான விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த இருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் முன்னதாக ஒருவரைக் கைது செய்த பளை பொலிஸார், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று (07) அவரை ஆஜர்படுத்திய நிலையில் அந் நபருக்கு 15,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேவேளை, 540 மில்லி லீட்டர் அரச சீல் மதுபானத்தை விற்பனை செய்தமை மற்றும் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது,அவருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.