நாவூறும் மொறு மொறுப்பான தோசை!!

  


தேவையான பொருட்கள்


புழுங்கல் அல்லது இட்லி அரிசி - 200 கிராம்


பச்சரிசி - 200 கிராம்


வெள்ளை முழு உளுந்து - 100 கிராம்


கடலைப் பருப்பு - 25 கிராம்


வெந்தயம் - 1 தேக்கரண்டி


உப்பு - தேவையான அளவு



முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, முழு உளுந்து, கடலைப் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.


பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த அனைத்தையும் கிரைண்டரில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.


நடு நடுவே தண்ணீர்ஊற்றி 20 நிமிடம் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்க விடவும்.


அதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லிய தோசையாக வார்த்து எடுக்கவும்.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Head

lines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.