இலங்கை ஏதிலிகள் 120 பேர் தொடர்பில் பிரித்தானியா எடுத்துள்ள தீர்மானம்!!
பிரித்தானிய கட்டுப்பாட்டில் உள்ள சாகோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை ஏதிலிகளை பாதுகாப்பாக வேறு நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த ஏதிலிகள் குழு இலங்கைக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவிக்காமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, இந்த ஏதிலிகள் சாகோஸ் தீவுக்கூட்டத்தை சேர்ந்த டியேகோ கார்ஷியா தீவில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர்.
சாகோஸ் தீவுகளின் உரிமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக பிரித்தானிய அதிகாரிகள் இந்த ஏதிலிகள் குறித்து அவசர முடிவொன்றை எடுக்க வேண்டியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அந்த தீவுகளின் உரிமை தொடர்பாக பிரித்தானியாவுக்கும், மொரீஷியஸுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
பின்னர், சாகோஸ் தீவுகள் மொரீஷியஸ்க்கு உரித்தானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை