உடுத்துறை மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணிகளுக்கு அழைப்பு!
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணிகள் எதிர்வரும் 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இப்பணியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பான விபரம் வருமாறு:-
வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்துக்கான சிரமதானம் 13 /11/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணிக்கு ஆரம்பித்து தொடர்ந்து மாவீரர் நாள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற இருக்கின்றது எனவே அனைத்து மாவீரர் உறவினரையும் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
தகவல்
மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினர்
உடுத்துறை
வடமராட்சிக் கிழக்கு
கருத்துகள் இல்லை