கொழும்பில் பொலிசார் குவிப்பு!!

 


அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புப் பேரணி” மருதானையில் ஆரம்பமாகியுள்ளது. இந்த பேரணி கோட்டை ரயில் நிலையம் நோக்கிச் செல்ல பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - மருதானையில் ஆரம்பமான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், டெக்னிக்கல் சந்தியின் ஊடாக கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. மருதானை டெக்னிக்கல் சந்திக்கு அருகில் பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.



 இதனால், அந்தப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுகின்றது. சந்தைக்கு அண்மையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தால் மருதானை, புறக்கோட்டை பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்துள்ளனர்.



பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் கலகமடக்கும் பொலிஸாரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஆயுதமேந்திய ​இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ,முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 43 ஆம் படையணி, சுதந்திர மக்கள் சபை உள்ளிட்ட சுமார் 20 அரசியல் கட்சிகளும் சுமார் 150 தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.