இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து!!

 


யாப்பாணம் சென்ற பயணிகள் பேருந்து ஒன்றும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேருக்கும் மேல் படுகாயமடைந்துள்ளனர்.


இந்த விபத்து சம்பவம் இன்று காலை வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை 5.30 மணியளவில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.


தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் டிப்பர் வாகன சாரதி உட்பட பேருந்தில் பயணித்த பயணிகளும் காயமடைந்த நிலையில் 6பேர் மாங்குளம் வைத்தியசாலையிலும் 4பேர் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.