கடலில் வீழ்ந்து மீனவர் மாயம்!!


 பேருவளை-மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.


தலாவிட, எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


குறித்த மீனவர் கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி “ஹிருன் சோன் 2” என்ற கப்பலில் ஐந்து மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.


குறித்த மீனவர் நேற்று (11) மாலை மீன்பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது கடலில் விழுந்ததாக படகின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


இதன்படி பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.