சிகிரியாவில் ஏறுவதற்கு 11000 ரூபா!

 


இலங்கையில் மிகபிரசித்தி பெற்ற இடமான சிகிரியா ஆசியாவிலுள்ள தொல்பொருளியல் சார்ந்த இடங்களில் ஒன்று என்பதுடன், உலக அருஞ் செல்வமாக இது 1982 இல் பிரகடனப்படுத்தப்பட்டது.

சிகிரியா காசியப்ப மன்னனின் (கி.பி. 477-495) நிர்மாணிப்பாகும். கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குரிய காலத்தில் அரண்மனை வாசஸ்தலமாகவும் கோட்டையாகவும் கட்டியெழுப்பப்பட்டது.

நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிகிரியா குன்றை பார்க்காமல் செல்வதில்லை. இந்நிலையில் சீகிரியா குன்றுக்கு ஏறுவதற்கு வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்து 11000 ரூபா அறவிடப்படுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வெளிநாட்டவர்கள் பலர் சீகிரியா குன்றில் ஏறுவதை தவிர்த்து வருவதாக சீகிரிய பிரதேச சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.