கடன் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய பரிகாரம்!
மகத்துவம் வாய்ந்த மார்கழி அமாவாசையானது இன்று வெள்ளிக்கிழமை அமாவாசையுடன் சேர்ந்து வந்துள்ளமை பெரும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.
காலையில் இருந்து மதியம் வரை நம் வீட்டு இறந்த முன்னோர்களுக்கான வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள். அவர்களின் அருளும் ஆசையும் இல்லாமலும் நமக்கு எந்த பிரச்சனைகளும் தீர்ந்து விடாது.
இந்த பரிகாரத்தை செய்ய மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு கைப்பிடி உப்பு, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம்,1 ரூபாய் நாணயம்,துளசி கொஞ்சம் பச்சை கற்பூரம், மிளகு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து முடிச்சாக கட்டி வீட்டில் பூஜை அறையில் வைத்து வணங்குங்கள்.
அதன்பின்னர் இரவு 8 லிருந்து 9 மணிக்குள்ளாக இந்த முடிச்சை உங்கள் விட்டு நிலை வாசலில் கட்டி விடுங்கள். இந்த முடிச்சில் வைக்கப்படும் மிளகை உங்கள் வீட்டில் எத்தனை நபர் இருக்கிறார்களோ அத்தனை மிளகு மட்டும் தான் வைக்க வேண்டும்.
அந்த மிளகையும் கடையில் புதியதாக வாங்கி வந்த மிளகாக தான் இருக்க வேண்டும். வீட்டில் சமையல்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் பழைய மிளகை பயன்படுத்தக் கூடாது .
இதில் சேர்த்து இருக்கும் மற்ற பொருட்களை எல்லாம் கடன் அடைக்கவும், செல்வம் பெருகவும் பயன்பட்டாலும், இந்த மிளகானது வீட்டில் திருஷ்டி, வீட்டில் யாருக்கேனும் தோஷம் வேறு ஏதேனும் கோளாறு இருந்தால் அதுவும் நம் குடும்பத்திற்கு கஷ்டத்தை ஏற்படுத்தும்.
அதை சரி செய்வதற்காகத் தான் இந்த மிளகை வைக்கிறோம். எனவே மிளகை மட்டும் ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்த படி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த முடிச்சை அடுத்த அமாவாசை வரை அப்படியே விட்டு விடுங்கள். அடுத்த அமாவாசை அன்று அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து மஞ்சள் தண்ணீரில் அலசி மறுபடியும் இதே போல் முடிச்சை தயார் செய்து நிலை வாசலில் கட்டி விடுங்கள்.
இதில் இருக்கும் பொருள்களை ஓடும் நீரில் போட்டு விடுங்கள். இல்லாத பட்சத்தில் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.
அடுத்த மாதம் இந்த முடிச்சை மாற்றிக் கட்டும் முன்பே உங்களுக்கு உரிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி கட்டாயமாக பிறந்து விடும்.
எனவே நம்பிக்கையோடு மகாலட்சுமி தாயார் மனதார வேண்டிக் கொண்டு இந்த முடிச்சை கட்டினால் கடந்தொல்லையிலிருந்து விடுபடலாம்.
கருத்துகள் இல்லை