5,000 பில்லியன் கோட்டபாயவால் நட்டம்!

 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நாட்டுக்கு 5 பில்லியன் நாட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கோட்டாபய ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை உடனடியாக நிறுத்தியதால் இவ்வாறு நாட்டுக்கு 5,978 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் வெளியாகியுள்ளது.

கடந்த 2020 செப்டெம்பர் 21ஆம் திகதி கோட்டாபய ஜனாதிபதிக்கு அப்போதைய ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் திட்டம் பொருத்தமான செலவு குறைந்த போக்குவரத்து தீர்வாக இல்லை என்று குறிப்பிட்டு, அது இடைநிறுத்தப்பட்டது.

அதேவேளை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், 12 வருட சலுகைக் காலம் உட்பட 40 வருட காலப்பகுதியில் இந்த திட்டத்துக்கான கடனைச் செலுத்தும் வசதியை வழங்கியிருந்தது.

அதோடு இதற்கான வருடாந்த வட்டி வீதம் 0.1 சதவீதமாக இருந்தது. இதேவேளை 2021 டிசம்பர் 31ஆம் திகதிக்குள் இந்த திட்டம் தொடர்பில் 604 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்தவேண்டியிருந்த நிலையில் எ இன்னும் அது செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.