வடக்கு மக்களுக்கான எச்சரிக்கை!!

 


மன்னாரில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் வரையான கடல் பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கிழக்கு கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சுறாவழியாக வலுவடைவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 80 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். தற்போது வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை உடனடியாக திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடமாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக 420 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறைக்கு கிழக்காக 492 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் தற்போது புயலாக மாறியுள்ளது.

தற்போது இதன் மையப்பகுதியின் அமுக்கமானது 997 மி.பா. ஆக மாறியுள்ளது. இது இன்று பிற்பகல் 994மி.பா. ஆகவும் குறைவடைய வாய்ப்புக்கள் உண்டு. ஏற்கெனவே அறிவித்தபடி இதற்கு 'மண்டாஸ்' என பெயரிடப்படும்.

இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 09.12.2022 இரவு அல்லது 10.12.2022 அருகே இந்தியாவின் தமிழ்நாட்டின் மரக்காணம் மற்றும் மகாபலிபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயலின் நகர்வுப் பாதை தற்போது வரை எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலிருந்து சற்றுத் தொலைவிலேயே அமைவு பெற்றுள்ளது. எனவே இந்த புயலினால் எமக்கு நேரடியான எத்தகைய பாதிப்பும் இடம்பெறாது. எனினும் இன்றுமுதல் (08.12.2022) குறிப்பாக நண்பகலுக்கு பின்னரிலிருந்து மழை கிடைக்க தொடங்கும்.

இது எதிர்வரும் 11.12.2022 வரை நீடிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் மிதமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. .காற்றைப் பொறுத்தவரை கரையோரப் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ.வேகத்திலும் உள்நிலப்பகுதிகளில் மணிக்கு 30-45 கி.மீ. வேகத்திலும் வீசும் வாய்ப்புள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம். நாம் புயலின் நகர்வுப் பாதையிலிருந்து விலகியே இருப்பதனால் பதிப்பு தொடர்பாக நாம் அதிகம் பீதி கொள்ள தேவையில்லை. ஆயினும் சற்று வேகமான காற்றுடன் கூடிய கனமழையை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பது அவசியம்.

அதே வேளை புதிய தாழமுக்கம் ஒன்று எதிர்வரும் 12.12.2022 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றுவதற்குரிய ஏதுநிலைகள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.