லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு!!

 


இலங்கையில் இன்று (05-12-2022) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 4,360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 4,610 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 1,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு 1850 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு தற்போது 815 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு 860 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.