நெய்மரின் வெற்றிக்கதை!!

 


இன்று  கால்பந்தில்  ஒரு ஆப்ரிக்கன் அணி  விளையாடுககிறதென்றால்,  அததில் விளையாடும்  வீரர்கள் பெரும்பாலும் பயிற்சி மைதானம் இலலாது,   பந்து வாங்க, காலணி  வாங்க வழி இல்லாமல் பயிற்சியாளர் இல்லாமல்,  தாங்களுக்குள்ளே இரண்டு அணிகளாகப் பிரித்து  தெருவில் விளையாடி வந்தவர்களாக தான் இருப்பார்கள்.  பிரேசிலின் வீிரர் நெய்மரும் அப்படி வந்தவர்தான்.



நெய்மர் பிறந்த இடம் ஒரு மலை வாழ் மக்கள் வாழக்கூடிய பகுதி தான்.  சுருக்கமாச் சொன்னால்,  பிரேசிலில் ஒதுக்கி வைக்கப்பட்ட இடம்.  குப்பைகளை மொத்தமாக கொட்டி எரிக்கும் ஒரு பகுதி அங்கு மைதானங்கள் பள்ளிகள் புட் பால் மைதானங்கள் என்று எதுவும் இல்லாத பகுதி அந்த இடத்தில் பிறந்து வளர்ந்து,  தானாக கால்பந்து கற்று கொண்டவர் நெய்மர்  இரண்டு மெழுகுவர்திகளை நட்டு வைத்து நடுவில் பந்தை அடித்து சிறு வயதில் வீட்டருகே பயிற்சி செய்வாராம்.



இவரது ஆட்டத்தைப் பார்த்த பிரேசிலிய முன்னாள் வீரர் டுங்கா இவரை சண்டோஸ் எனப்படும் பிரேசிலிய கிளப்பில் சேர்த்து விடுகிறார்.  நிறைய நட்சத்திரங்களைப் பிரேசிலில் உருவாக்குவது இந்த கிளப் தான் சாண்டோஸ் அதில் சில வருடங்கள் விளையாடிய பின் அதே டுங்கா இவரது திறமையைப் பார்த்து 17 வது வயதில் சில மில்லியன் டொலர்கள் கடன் வாங்கி புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் கிளப்புக்கு அனுப்பி வைக்கிறார்.  அங்கு ரொனால்டோ பெக்காம் போன்ற ஜாம்பவான்கள் அப்போது விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


ரியல் மாட்ரிட் கிளப்பில் சில வருடங்கள் கிளப்பில் இருந்து விட்டு வேறு கிளப்புக்கு 200 மில்லியன் யூரோ டாலர்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  அந்த வருவாயில் தனக்கு உதவி செய்த டுங்காவுக்கு ஒரு தொகை கொடுத்து விட்டு மீதம் உள்ள ரூபாயில் தான் வளர்ந்த அந்த மலை வாழ் பகுதியில் பள்ளி, விளையாட்டு மைதானம் எனக் கட்டிக் கொடுத்து விட்டு அந்த பகுதியைச் சேர்ந்த 1500  குழந்தைகளின் கல்விச் செலவைவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.


 இவர், தான் பயிற்சி பெற்ற சாண்டோஸ் கிளப்பின் பெயரையே தன் குழந்தைக்கும் சூட்டி இருக்கிறார் 

இப்போது,  வருடம் 800 கோடி ரூபாய் வருமானம்  ஈட்டும்  ஒரு கால்பந்து வீரராக இருக்கிறார். இருப்பினும்  கஷ்ட காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த தன் தங்கையின் படத்தை வலது கையில் வரைந்து இருக்கிறார்.

 

இப்போது நெய்மரின் கிராமமே ஹைடெக்காகி விட்டது. நெய்மரின் வேண்டுகோளை ஏற்று,  பிரேசிலிய அரசு அந்தப் பகுதியில் இப்போது குப்பைகளைக் கொட்டி எரிப்பதைத் தடை செய்து விட்டார்கள்.  ஒரு சிறிய ரன்வேயுடன் கூடிய விமான ஓடுதளம் கூட அங்கு நிறுவி இருக்கிறார்கள்.  ஆம் .....


ஒரு திறமையான விளையாட்டு வீரனால் ஒரு குப்பைக் கிடங்கு இருந்த கிராமத்தைக் கூட ஹைடெக் நகரமாக மாற்ற முடியும் என்பதற்க்கு நெய்மரே சாட்சி .....


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.