மற்றுமொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் மோசடி!!
போலந்துக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் திடீர் சோதனையிட்டுள்ளனர்.
திம்ரிகஸ்யாய பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த முகவர் நிலையமே இன்று (27) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் முகவருக்கு இல்லை என்ற உண்மைகள் இதன்போது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறுவனம் தொடர்பான உண்மைகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை