கஞ்சா செடியுடன் கைது செய்யப்பட்டார் காவல்துறை உயர் அதிகாரி !!
நேற்று (8) இரவு , மொனராகலை வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) சிசிர குமார, கஞ்சா செடிகளுடன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அவர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, 350 உலர்ந்த கஞ்சா செடிகள் மற்றும் உலோகங்களை தேடும் ஸ்கேனர் இயந்திரத்தையும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனவும் கைப்பற்றிய கஞ்சாவின் எடை சுமார் 15 கிலோகிராம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை