லண்டனில் தமிழர் கைது!!

 


யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட , லண்டனின் பிரபல வர்த்தகநிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் நேற்று முன்தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகரின் வீட்டில் அவரது மகள் தனது காதலனுடன் தனிமையில் இருந்த போது அங்கு வந்த வர்த்தகர் ஆபிரிக்க நாட்டவரான காதலனை இரும்புக் கம்பியால் தாக்கிக் காயப்படுத்தியதாகத் தெரியவருகின்றது.

இத் தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற காதலனைக் காப்பாற்றுமாறு பொலிசாரிடம் காதலியான மகள் முறையிட்டுள்ளார். அங்கு விரைந்து வந்த பொலிசார் காதலனை மீட்டதுடன் வர்த்தகரையும் விலங்கிட்டுப் பிடித்துச் சென்றுள்ளார்கள்.

வர்த்தகரின் மகளுக்கு, அவரது நண்பனான, கொழும்பில் வசிக்கும் பிரபல தமிழ் வர்த்தகரின் பொறியியல் பட்டதாரி மகனை ஓரிரு வருடத்தில் திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்ததாக வர்த்தகரின் நண்பர்கள் மூலம் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.