அரச சேவையாளர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

 


அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையைக் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பல்வேறு சிறப்புத் தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அரச சேவையை மேலும் செயல் திறன் மிக்கதாக மாற்றுவதுடன் அரச சேவையை பொதுமக்கள் தாமதமின்றி பெற்றுக்கொள்ள இச் சேவையின் மூலம் வழி ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல் மற்றும் வேலை நாட்களை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கவனம் செலுத்தியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.