வர்த்தகரை அச்சுறுத்தி கப்பம்!!

 


வர்த்தகரை அச்சுறுத்தி 250,000 ரூபா கப்பம் கோரி நுழைவாயில் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் மாத்தறை மிதிகம பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு இது தொடர்பான சந்தேகநபரொருவரை மிதிகம பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து 3210 மில்லிகிராம் ஹெரோயினும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் 5 ஆம் திகதி மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திக் கப்பம் கோரியதுடன் வீட்டின் முன்பக்க வாயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டாவது சந்தேக நபரென அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெலிகம இப்பவல பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான சந்தேகநபர் இப்பாவில பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

மேலும் அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.