இலங்கையை நெருக்கவுள்ள புதிய காற்றழுத்தம்!

 


இன்றைய தினம் (27-01-2023) காலை தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இது நாளை, ஜனவரி 28ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

அதன்பின்னர், அது படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து எதிர்வரும் முதலாம் திகதி இலங்கையின் கிழக்குக் கரையை அடையக்கூடும்.

இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 40-45 கி.மீ ஆக இருக்கும் என்று எதிர்வுகூரப்பட்டுள்ளது.

மேலும், கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், கடலும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.