வாழ்வாங்கு வாழும் கணவன்!!
பருவங்கள் போனாலும்
பாசங்கள் தீராமல்,
உருவங்கள் மாறினாலும்
உணர்வுகள் சோராமல்,
சருமங்கள் சுருங்கினாலும்
சலிப்புகள் பாராமல்,
கருமங்கள் கூடினாலும்
கண்டதையும் நாடாமல்,
எந்தத்
தருணங்கள் வந்தாலும் தன்
துணையை வாடாமல்,
தேவதையாய்ப் பார்ப்பவன்
வாழ்வாங்கு வாழும் கணவன்❗❤
வாழ்க்கைத் துணைவிக்கு
அவன் இறைவன்❗🙏
-பிறேமா(எழில்)-
கருத்துகள் இல்லை