வியக்க வைக்கும் 81 வயது மருத்துவர்!

 


யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மருத்துவர் அருளானந்தம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனது அயராதசேவை மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மருத்துவர் அருளானந்தம் ஆவார்.

அவருக்கு இப்போது 81 வயதாகிறது. இந்த வயதிலும் தினமும் காலை 7 மணிதொடக்கம் பகல் 2 மணிவரை தனது வைத்திய நிலையத்தைத் திறந்து, சேவை புரிந்து வருகிறார்.

இவரின் சிறப்பம்சம் என்னவென்றால், மிகவும் குறைந்த கட்டணத்தோடு மருத்துவம் பார்க்கும் அதேவேளை, வறியவர்கள், தூர இடங்களில் இருந்து வருவோர் போன்றவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சையளித்து வருகிறாராம் மருத்துவர் அருளானந்தம்.

இவர் ஒரு மனிதக் கடவுள்’ என இவரிடம் சிகிற்சை பெற்ற ஏழைகள் புகழாரம் சூட்டுகின்றனர். இந்நிலையில் 81 ஆவது வயதிலும் இப்படி சேவை மனத்தோடு அயராது உழைக்கும் மருத்துவர் அருளானந்தம் ஐயாவின் சேவை இன்னும் பல்லாண்டுகாலம் நீடிக்க வேண்டுமென பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பொருளாதார நெருகடியால் சிறந்த மருத்துவம் என்பது ஏழைமக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்ட நிலையில் இவர்போல வாழும் தெய்வங்கள் நம் தேசத்தில் உலாவருவது நாம் செய்த பாக்கியம் என்றுதான் கூறவேண்டும்.    


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.