ஆலயத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!

 


யாழ்ப்பாணம் - சாவகச்சேரி காளி கோவிலில் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரைப் பவுண் தங்க ஆபரணங்களும், உண்டியலில் இருந்த 35000 ரூபா பணமும் கொள்ளையர்கள் களவாடி சென்றுள்ளனர்.

அதோடு அங்குள்ள்  வாகன திருத்து நிலையத்தை உடைத்த கொள்ளை கும்பல், அங்கிருந்த நான்கரை லட்சரூபாய் பணத்தையும் களவாடி சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஆலயத்தில் இருந்த அரிசி மூடைகள் மூன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதேவேளை வாகனம் திருத்தும் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நாலரை(4.5) லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

அதேவேளை காளி அம்பாள் ஆலயத்தில் இடம் பெற்று வந்த வருடாந்த மாகோற்சபம் நேற்றைய தினம் நிறைவடைந்த நிலையிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.