வியக்க வைக்கும் நடமாடும் உணவகம்!!

 


திம்புலாகல சிறிபுர நகரத்தில் பேருந்திற்குள் உணவகம் நடத்தும் நபர் ஒருவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இவ்வாறு பேருந்திற்குள் உணவகம் ஒன்று 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையினால் நடத்தப்பட்டு வருகின்றது. பேருந்திற்குள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை ஹோட்டல் நடத்தப்படுகிறது.

இந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு பேட்டரிகள் மூலம் இரவு நேரத்தில் மின்சாரம் கிடைக்கிறது. ஏனைய உணவகங்களிலுள்ள அனைத்து வசதிகளும் இந்த பேருந்திலும் உள்ளது.

அதேவேளை இந்த பஸ்சில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரவு பகலாக எந்த இடத்திற்கும் சென்று திருமண விருந்துகளை ஏற்று ஹோட்டல் சேவைகளை வழங்குவது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.