விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார்- வெளியான பரபரப்பு தகவல்!!

 


விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என தமிழக அரசியல் முக்கியஸ்தர்களில் ஒருவரும், தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளதாக  இந்திய ஊடகங்கள்  பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றபோது புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிரிழந்ததாக  ராஜபக்க்ஷ அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், vஇடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், vஇடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது.

எனினும் கூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றும் தமிழ் தேசிய அமைப்புகள் கூறி வருகின்றன. 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரபாகரன் பற்றிய அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். பிரபாகரன் பற்றிய உண்மையை கூற இருக்கிறேன். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார்.

பிரபாகரன் குடும்பத்தினருடன் தொடர்பு இருக்கிறது. பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிபடுத்துகிறேன் என்றும் பழ. நெடுமாறன் கூறியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.