கனடா கணவனை கைவிட்டு காதலனுடன் சென்ற குடும்ப பெண்!

 


யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் வாகனத்தில் வந்த சிலரால் வீடு புகுந்து இளம் பெண்ணும், குழந்தையும் தூக்கிச் செல்லப்பட்ட விவகாரம் கடத்தல் அல்லவென தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவிலுள்ள கணவனை கைவிட்டு, வவுனியாவிலுள்ள காதலனுடன் வாழ்வதற்கு அந்த பெண் சென்றுள்ளார்.


யாழ் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள வீடொன்றிற்குள் நேற்று முன்தினம் காலையில் இந்த கடத்தல் நாடகம் இடம்பெற்றிருந்தது.

வாகனமொன்றில் வந்த நான்கு பேர் வீடொன்றிற்குள் நுழைந்து, 31 வயதான இளம் குடும்பப் பெண்ணை தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றியதுடன் 3 வயது குழந்தையும் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்தார்.

அந்த சமயத்தில் வாகனத்தில் குடும்பப்பெண் ஏற்றப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட குடும்பத்தினர், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட நிலையில்  பொலிசார் அந்த பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தியபோது தான் காதலனுடன் விரும்பியே செல்வதாக பெண் பதிலளித்துள்ளார்.

இதையடுத்து , ஜோடியை பொலிஸ் நிலையம் வருமாறு பொலிசார் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை கடத்தப்பட்ட இளம் குடும்பப் பெண், வவுனியாவில் தங்கியிருந்தபோது கூட்டிச்சென்றவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கடந்த வாரமே அந்த பெண்ணை குடும்பத்தினர் சாவகச்சேரிக்கு அழைத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்தே காதலன் தரப்பினர் வவுனியாவிலிருந்து வந்து சாவகச்சேரியில் குடுப்ப பெண்ணை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.