ரத்து செய்யப்பட்டன ரயில் சேவைகள்!!

 


பெரும் எண்ணிக்கையிலான ரயில் பயணங்கள் இன்று (13) இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிதெரிவிக்கப்படுகின்றது.

இதில் .அலுவலக ரயில்களும் அடங்குகின்றன.

ரயில் இயந்திர சாரதிகள் தொழிற்சங்கத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுத்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் 

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. 

இதன்படி மஹவயிலிருந்து கொழும்பு மற்றும் மொரட்டுவை வரை பிரதான ரயில் வீதியில் இயங்கும் அலுவலக ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பிரதான வீதியில் இயக்கப்படும் பல அலுவலக ரயில்களும் இன்று காலை ரத்து செய்யப்பட்டன.

இதேவேளை கரையோர ரயில் வீதியிலும் பல அலுவலகப் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் சமுத்திராதேவி ரயில்,  சேவையில் உள்ளதாக கூறப்படுகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.