பாகிஸ்தானில் மாணவர்கள் 51 பேர் பலி!!

 


பாகிஸ்தானின் பாடசாலை மாணவர்களுடன் படகு கவிழ்ந்ததில் 51 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின்  வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள நீர்த்தேக்கத்தைப் பார்வையிடச் சென்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  


உயிரிழந்தவர்களில் 49 பேர் மாணவர்கள் எனவும் எஞ்சிய இருவர் படகு ஓட்டுநர் மற்றும் ஆசிரியர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


அனைத்து மாணவர்களும் 7 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியமையினால் படகு கவிழ்ந்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.