நசை!!
உன் காிசனப்பாா்வை
என் துயா் துடைக்க வல்லதென்பதில்
உடன்படுகின்ற நான்
என் மௌனப்பாா்வை
உன் தூக்கம் தொலைக்கின்றதென்பதில்
உணா்ந்து உலாவும் நீ
மன உபாதைகளை நிவாரணிக்கத்தகுந்த
காதலெனும் சொல்
மனதில் காட்சியாகி அது நிஜமாகும் போது
சொல்லொணா இன்பம் மனம் தழுவுதலை
உன் மூலம் நுகரவே நடமாடுகின்றேன்
நெருக்கமென்பது மேனிகளுக்கானதல்ல
மன அலைகளின் ஆரத்தழுவல்
அன்பென்பது வாா்த்தை ஜாலமுமல்ல
காணா நேரத்தில் கண்களில் நீா் வருவது
தொடும் தூரம் ரசனைக்கானதன்றால்
தொடாதூரம் ஆத்மாா்த்த நங்கூரம்
எப்போதும் போல்
நாட்கள் கடந்தே செல்லட்டும்
காலம் கருணை மிகுந்ததெனும்
நம்பிக்கை இருக்கிறது
-- சுப்பையா கந்தையா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை