வெடிமருந்துகளுடன் திருகோணமலையில் மேலும் இருவர் கைது!!

 


திருகோணமலை பஸ் நிலையத்திற்கு அருகில் 02 சந்தேக நபர்கள் வாட்டர் ஜெல் எனப்படும் 58 வர்த்தக வெடிமருந்துகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.


கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று (18) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சட்டவிரோத விற்பனைக்காக முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்பட்ட போதே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் 58 குச்சிகளைத் தவிர, முச்சக்கரவண்டியில் இருந்து 100 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.


வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வர்த்தக வெடிமருந்துகளை கடற்படையினர் எடுத்துச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 34 வயதுடைய நிலாவெளி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.


மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளgதாக கடற்படை தெரிவித்துள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.