இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!!
இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அதிரிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் இன்றைய தினம் (03-03-2023) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 100 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 15.50 சதவீதம் மற்றும் 16.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டரீதியான கையிருப்பு விகிதத்தை நிலவும் 4.00% அளவிலேயே பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை