பிரான்சில் மாயமான யாழ். இளைஞர்: பரிதவிக்கும் தாயார்!


 பிரான்ஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது தாயார் கண்ணீர் விட்டுக் கதறியழும் காணொளி ஒன்று சமூகவலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக தனது மகன் பிரான்ஸ் சென்று 10 வருடங்களான நிலையில் தற்போது காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.

கணவரை இழந்த குறித்த பெண்ணுக்கு மகன் ஒருவர் மட்டுமே அவர் வாழ்வின் ஆதாரமாக இருந்துள்ளார்.

குறித்த தாயார் இந்தியாவில் தனித்து வசித்து வரும் நிலையில் மகன் பிரான்ஸிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் காணாமல்போன தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளிடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.