கல்விக்கு கரம் கொடுக்கும் சிங்கப்பூரில் பணிபுரியும் யாழ். பல்கலை உறவுகள்!!

 


சிங்கப்பூரில் தற்போது பணிபுரிந்துவரும் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட 2014 மாணவ அணியின் 8 பேர் இணைந்து ஒரு மாணவியின் கல்விக்கான செலவினைப் பொறுப்பெடுத்துள்ளார்கள். 

மாணவியின் தந்தையார் யுத்தத்தில் இறந்துவிட்டதுடன்  தாயாரும் யுத்தத்தில் ஒற்றைக்காலினை இழந்துள்ளார். 

மிகவும் வறுமை நிலையில் தாயாரின் பராமரிப்பின்கீழ் வாழ்ந்து வரும் மாணவியின்  கல்விக்கான செலவினை இவர்கள் பொறுப்பெடுத்து இந்த மாதத்திற்கான பணத்தினையும் வழங்கி வைத்துள்ளார்கள். 

இவர்களின் முன்மாதிரியான இச்செயலை சமூக ஆர்வலர்கள் பாராடியுள்ளனர்.


உதவியினை பெற்றுக்கொண்டவர்கள் சார்பில் நிறைந்த நன்றிகளை சமூகத்தினர் பாராட்டி வருகின்றனர். 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.