யாழ். பிரபல பாடசாலை மாணவன் தற்கொலை முயற்சி!!

 


யாழ் .  பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த வேளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் மீட்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.   அடுக்கு மாடியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றபோதே அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 

இவரது புத்தகப்பையில் இருந்து தனது உயிர் மாய்ப்பிற்கான மிக நீண்ட கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் நிகழ்நிலை மற்றும் கணினி விளையாட்டுகளில் ஏற்பட்ட தீவிர ஈடுபாட்டின் காரணமாகக் குறித்த மாணவன் அண்மைக் காலமாக உள நெருக்கீட்டுக்கு ஆளாகியிருந்ததாகவும், இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டுத் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தினால் காயமேற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


 நிலையில் இந்த மாணவன் யாழ்.  போதனா. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொகண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.