8 கோடி வரதட்சணை கொடுத்து தங்கையின் திருமணத்தை நடத்திய சகோதரர்கள்!!

 


சகோதரியின் திருமணத்திற்கு நான்கு சகோதரர்கள் 8 கோடியே 31 லட்சம் ரூபாயினை வரதட்சணையாக அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்தியாவில் 1961ம் ஆண்டின் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம், வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாக கருதப்படுகின்றது.

அதன்படி அர்ஜுன் ராம் மெஹாரியா, பகீரத் மெஹாரியா, உமைத் ஜி மெஹாரியா மற்றும் பிரஹலாத் மெஹாரியா ஆகிய 4 சகோதரர்களே சகோதரியின் திருமணத்திற்காக இந்த பெரும் தொகையை செலுத்தியுள்ளனர்.

இதன்போது வரதட்சணை தொடர்பாக வெளியான தகவலின்படி, சுமார் ரூ.2.21 கோடி ரொக்கம், 4 கோடி மதிப்பிலான 100 பிகாஸ் நிலம் மற்றும் குதா பகவன்தாஸ் கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் 1 பிகா நிலம் அளிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறாக தங்கையின் திருமணத்திற்கு சகோதரர்கள் 8 கோடியளவில் வரதட்சணை கொடுத்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.