யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!



வட மாகாண  மகளிர் விவகார அமைச்சு நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வு  இன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு  யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.  


மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


இந்த நிகழ்வில்,  8 பெண் சாதனையாளர்கள் மற்றும்  15 பெண் தொழில் முயற்சியாளர்கள் பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றம் என்ற தொனிப்பொருளில் குறும்படம்,  புகைப்படம் என்பவற்றில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ள.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக  மாலை 5. மணிவரை பெண் தொழில் முயற்சியாளர்களின்  உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.