யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

 


யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 2023 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது 02.03.2023 வியாழக்கிழமை (இன்று) பி.ப 1.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. 

பாடசாலையின் அதிபர் திரு. செல்லையா இளங்கோ தலைமையில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் முதன்மை விருந்தினராக  இலங்கை துறைமுக அதிகார சபையின் மூத்த ஒப்பந்த அதிகாரி திரு. சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களும் சிறப்பு விருந்தினராக மானிப்பாய் பொலிஸ் நிலைய அதிகாரி  திரு. ஜி. ஏ. குணதிலக அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ்.  இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.  எஸ். உதயணன் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். 

ஆசிரியர்கள்,  மாணவர்கள்,  பெற்றோர்கள்,  சமூக ஆர்வலர்கள் , பொது அமைப்புகளின் தலைவர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.