கான்ஸ்டபிளை மோதிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட நபர் கைது!!

 


பொலிஸ் கான்ஸ்டபிளை மோதிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

உனவடுன, எரமுதுகஹா சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வேளையே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அத்தோடு இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உனவடுன, மாதரம்ப கெகுலனோவி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹபராதுவ பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் நேற்று (15) மாலை காலியிலிருந்து மாத்தறை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.