பாடசாலைக்குள் நுழைந்து மாணவி மீது வாள்வெட்டு!!

 


கல்ஓயா பிரதேசத்தில் உள்ள தம்ம பாடசாலை (பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்ஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தம்ம பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீதே வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலய வளாகத்தினுள் (02) காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் இமாஷா என்ற மாணவியை கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்ஓயா காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவி தற்போது கந்தளாய் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேகநபரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவருடன் காதல் உறவு கொள்ள மறுத்ததால் வாள்வெட்டை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.