அதி உயர் ஜனாதிபதி விருது பெற்ற மட்டக்களப்பு மாணவர்கள்!!



மட்டக்களப்பு - புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் சாரணியத்திற்கான அதி உயர் விருதான ஜனாதிபதி விருது பெற்றுள்ளனர்.

சிரேஷ்ட சாரணர்களான இவர்கள் தரம் மூன்றில் கல்வி கற்கும் போதிருந்து சரணியத்தில் இணைந்து தமது ஆற்றல்களை  வெளிப்படுத்தி வந்துள்ளனர்.இந்த நிலையில் இவர்களின் சேவைக்கான  கௌரவிப்பு நிகழ்வு  நடைபெற்றுள்ளது.
 

குறித்த நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் வி. பிரதீபன் மற்றும் பாடசாலை சாரண ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.