துப்பாக்கியுடன் மீதும்பிட்டி பகுதியில் ஒருவர் கைது. -ராமு தனராஜா


பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதும்பிட்டி 96 பிரிவில் துப்பாக்கி ஒன்று  மறைத்து வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் மீதும்பிட்டி 96 பிரிவிற்கு சென்று சந்தேகத்துக்கிடமான இடத்தை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர்.

 அத்துடன் 36 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதுடன் குறித்த சந்தேக நபரையும் துப்பாக்கியையும் பசறை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.


குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை

 மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.