மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!


பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வெளியாட்கள் நுழைந்து பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கு நேற்று மேலதிக வகுப்புநடபெற்றுக்கொண்டிருந்தபோதே, குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வகுப்பில் இருந்த இரு மாணவர்கள் மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் கொடூரமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இரண்டு மாணவர்களுக்கும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.