எங்கள் ராசபறவைகளை இங்கே தானே தந்து நடந்தோம்.
இந்த இருள்வானி்ன் அடியில்தானே நம் இறுதி ராஜ்யமே குடங்கிக் கிடந்தது.
ஒவ்வொரு குறுணிக்கற்களாக செதுக்கிக் கட்டப்பட்ட
சுதந்திர தேவியாள் சிலை இந்த கொதிமணலில்தானே
சிதைத்து வீசப்பட்டது.
இந்தப் பசிவெளியில்தானே எங்கள் சூரியன்கள் ஒளியிழந்தன.
பட்ட நிலமே
பாழ் நிலமே
சாட்சியாய் கிட.
கருத்துகள் இல்லை