சொகுசு பேருந்தில் இடம்பெற்ற மோசடி!!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிசொகுசு பயணிகள் பேருந்தில் தனக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக புலம்பெயர் தேசத்தில் இருந்து இலங்கை வந்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்ட ஈழத்தமிழர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த குறித்த நபரை பேருந்தின் நடத்துநர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்காமல் வேறு ஒரு இடத்தில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டதற்கு பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் குறித்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அவமரியாதைக்கு உட்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் கூறுகிறார்.
அதாவது பேருந்து நீங்கள் சொல்லும் பாதை வழியாக செல்லாது எனவும் இதற்கு மேல் செல்ல வேண்டுமானால் முச்சக்கரவண்டி ஒன்றைப் பிடித்துச் செல்லுமாறும் கூறி அவரை நடு வீதியில் இறக்கிச் சென்றுள்ளனர்.
ஆனால் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பொழுது தான் இறங்க வேண்டிய இடத்தின் ஊடாகவே பேருந்து பயணிக்கும் எனத் தெரிவித்தே தனக்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
இதனை நம்பியே குறித்த பேருந்தில் தனது பயணத்தை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார். உங்களை நம்பி பெறுமதியான ஆவணங்களுடன் பேருந்தில் ஏறும் மக்களை இவ்வாறு ஏமாற்றாதீர்கள். என குறித்த நபர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை