IPL- இறுதி போட்டி 11.45 மணியளவில் தொடரும்!!



தற்போது மழை முடிவடைந்த நிலையில் மைதானத்தில் இருக்கும் நீரை வெளியேற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன 11.45 மணியளவில் மீண்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 



மேலும் 

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் IPL இறுதி போட்டி மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.


நாணய சூழற்சியில் வெற்றியீட்டிய சென்னை சுப்பர் கிங்ஸ், முதலில் கள தடுப்பை தேர்வு செய்தது.


இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றது.


பதிலுக்கு 215 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மூன்று பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டங்களை பெற்ற நிலையில், போட்டிக்கு மழை குறுக்கிட்டது.


மழை தற்போது விட்டிருப்பதாகவும், போட்டியை விரைவாக ஆரம்பிக்க முடியும் எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் சொல்கின்றன. 


இதேவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஓவர் குறைக்கப்படுமாக இருந்தால் சென்னைக்கான வெற்றியிலக்கு டக்வர்த் லூவிஸ் முறைப்படி தீர்மானிக்கப்படும். 


அதன்படி சென்னை வெற்றிபெற 5 ஓவர்களில் 66 ஓட்டங்களை அல்லது 10 ஓவர்கள் என்றால் 123 ஓட்டங்களையும் அல்லது 15 ஓவர்கள் என்றால் 171 ஓட்டங்களையும் பெற்றிருக்க/ பெற வேண்டும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.