தவிப்பு - கவிதை!!

 


உள்ளம் கசிந்து 

உப்பு நீர் வடிகிறது.

அலைப்புற்றுத் துடிக்கிறது

ஆவி.


மாயச்சுழலின்

மோகனங்கள்

 மருதாணிச் சிவப்பாகி

மறைந்து போனது......


நீல வானில்

நீயிருப்பதாய்

நேச மனங்கள்

தேடிக்களைக்கிறது.


உயிரின் பாடல்களும்

உறவின் தேடல்களும்

தூரத்துப் பச்சையாக

இடைவெளி.காண்கிறது.


நீயற்ற கூடு

நிசப்தமாய் அழுகிறது.

காலம் எமக்காக

கைமருந்து தருகிறது.


 நிண வேர்கள் மங்கிவிட

நின்று துடிக்கிறது ஆன்மா.

சோலை பொசுங்கிய கானகத்தில்

சோபை வருமோ 

சொல்லடி தங்கம்......  



கோபிகை 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


 


 

   






 

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.